அவளும்.... நானும்....!!!.

 

Episode - 1

 

"அடியே என்னதான் டி ன்னுவ உள்ள, சீக்கிரம் வா..." (நம்ம ஹீரோயின் அம்மா தான்)....

 

"வந்துட்டேன் மா"... என்று நந்தினி அழகிய pink நிற புடவையில் தேவதை போல் வந்தாள்

 

"எங்க டி காலையி்ல் கிளம்பிட்ட. இன்னும் 2 மாசத்துல கல்யாணம் ஞாபகம் இருக்கா இல்லையா. வீட்டு வேலைய கத்துப்பனு பாத்தா ஊர் சுத்த கிளம்பிட்ட. பாவம் டி என் தம்பி...

 

" சரி வரேன் மா" என்று நகர்ந்தாள். அவள் அம்மாவின் பேச்சு காதில் விழுந்தது போல் தெரியவில்லை..

 

சற்று கவலையாக தன் மகளை பார்த்து கொண்டு இருந்தாள் லக்ஷ்மி..

 

வேகமாக வெளியே வந்த நந்தினி ரவீந்திரன் மீது மோதி விட்டால்..

 

" ஹையோ சாரி மாமா" என்றவள் அவன் முகம் கூட பார்க்காமல் சென்று விட்டாள்...

 

"அக்கா.. அக்கா" லக்ஷ்மியை கூப்பிட்டவாரே உள்ளே வந்தான் ரவீந்திரன்...

 

ரவீக்கும் நந்தினிக்கு தான் திருமணம் பேசி முடிவு செய்திருக்கிறது..

 

Comments

Popular posts from this blog