Episode - 1 " அடியே என்னதான் டி ப ன்னுவ உள்ள , சீக்கிரம் வா ..." ( நம்ம ஹீரோயின் அம்மா தான் ).... " வந்துட்டேன் மா "... என்று நந்தினி அழகிய pink நிற புடவையில் தேவதை போல் வந்தாள் . " எங்க டி காலையி்ல் கிளம்பிட்ட . இன்னும் 2 மாசத்துல கல்யாணம் ஞாபகம் இருக்கா இல்லையா . வீட்டு வேலைய கத்துப்பனு பாத்தா ஊர் சுத்த கிளம்பிட்ட . பாவம் டி என் தம்பி ... " சரி வரேன் மா " என்று நகர்ந்தாள் . அவள் அம்மாவின் பேச்சு காதில் விழுந்தது போல் தெரியவில்லை .. சற்று கவலையாக தன் மகளை பார்த்து கொண்டு இருந்தாள் லக்ஷ்மி .. வேகமாக வெளியே வந்த நந்தினி ரவீந்திரன் மீது மோதி விட்டால் .. " ஹையோ சாரி மாமா " என்றவள் அவன் முகம் கூட பார்க்காமல் சென்று விட்டாள் ... " அக்கா .. அக்கா " லக்ஷ்மியை கூப்பிட்டவாரே உள்ளே வந்தான் ரவீந்திரன் ... ரவீக்கும் நந்தினிக்கு தான் திருமணம் பேசி முடிவு செய்திருக்கிறது ..
Comments
Post a Comment